6,500 தபால் நிலையங்களில் ஆதார் பதிவு மையம்

நாடு முழுவதும் சுமார் 6,500 தபால் நிலையங்களில் ஆதார் பதிவு மையங்கள் தொடங்கப்பட்டுள்ளதாக இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் சுமார் 6,500 தபால் நிலையங்களில் ஆதார் பதிவு மையங்கள் தொடங்கப்பட்டுள்ளதாக இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக யுஐடிஏஐ புதன்கிழமை வெளியிட்ட தகவலில் கூறப்பட்டுள்ளதாவது:
நாடு முழுவதும் 13,466 தபால் நிலையங்களில் ஆதார் பதிவு மையங்கள் அமைப்பதற்காக, சுமார் 200 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. அதன்படி, சுமார் 6,500 தபால் நிலையங்களில் ஆதார் பதிவு மற்றும் தகவல் மேம்படுத்துதல் மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள தபால் நிலையங்களில் விரைவில் இந்த மையங்கள் தொடங்கப்படும் என்று யுஐடிஏஐ தெரிவித்துள்ளது.
முன்னதாக, வங்கிக் கிளைகளிலும் ஆதார் பதிவு மையங்கள் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com