தில்லியில் கர்நாடக எம்.பி.க்களுடன் சித்தராமையா நாளை ஆலோசனை 

காவிரி வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு குறித்து விவாதிக்க தில்லியில் மார்ச் 16-ஆம் தேதி கர்நாடக எம்.பி.க்களுடன் முதல்வர் சித்தராமையா ஆலோசனை நடத்துகிறார்.

காவிரி வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு குறித்து விவாதிக்க தில்லியில் மார்ச் 16-ஆம் தேதி கர்நாடக எம்.பி.க்களுடன் முதல்வர் சித்தராமையா ஆலோசனை நடத்துகிறார்.
காவிரி வழக்கில் உச்ச நீதிமன்றம் கடந்த பிப்.16-ஆம் தேதி இறுதித் தீர்ப்பை வெளியிட்டிருந்தது. இந்தத் தீர்ப்பில் கர்நாடகத்துக்கு கூடுதலாக 14.75 டி.எம்.சி தண்ணீர் ஒதுக்கியிருந்ததோடு, தனது தீர்ப்பை அமல்படுத்த ஏதாவதொரு செயல்திட்டத்தை(காவிரி மேலாண்மை வாரியம் போன்றவை)கொண்டுவர மத்திய அரசுக்கு ஆணையிட்டிருந்தது. 
இந்தத் தீர்ப்பு குறித்து பெங்களூரில் மார்ச் 8-ஆம் தேதி முதல்வர் சித்தராமையா தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதா? இல்லையா? என்பது குறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி முடிவு செய்ய தீர்மானிக்கப்பட்டது. 
இந்நிலையில், மார்ச் 15-ஆம் தேதி இரவு 10 மணியளவில் புதுதில்லிக்கு செல்லவிருக்கும் முதல்வர் சித்தராமையா, அங்குள்ள கர்நாடக இல்லத்தில் மார்ச் 16-ஆம் தேதி காலை 9 மணிக்கு கர்நாடக எம்.பி.க்களுடன் ஆலோசனைநடத்த அழைப்புவிடுத்துள்ளார். 
இந்த கூட்டத்தில் காவிரி வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு குறித்து விவாதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com