காங்கிரஸ் தலைவர் ராகுல், சமூகவலைதளமான ட்விட்டரில் கடந்த அக்டோபர் மாதம் முதல் பரபரப்பாக இயங்கி வருகிறார். அவ்வப்போது நடைபெறும் நிகழ்வுகள் குறித்த தனது கருத்துக்களையும், விமரிசனங்களையும் அதில் பதிவிட்டு வருகிறார்.
குறிப்பாக, பாஜக அரசின் செயல்பாடுகளை கடுமையாகச் சாடி வருகிறார். அதிலும், மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்கள் தொடர்பாகவும், அதில் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டி வருகிறார்.
பணமதிப்பிழப்பு, பொருளாதார சரிவு, ஜிஎஸ்டி வரியை கப்பர் சிங் வரி என்று அவ்வப்போது கேலி செய்து வரும் ராகுல், தனது ட்விட்டர் பக்கத்தின் பெயரை சனிக்கிழமை மாற்றியுள்ளார்.
முன்னதாக, ராகுல் ட்விட்டர் கணக்கு இயக்கத்தின் பின்னணியில் பலர் செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தபோது, தனது செல்ல நாய் தான் தன்னுடைய ட்விட்டர் கணக்கை பராமரித்து வருவதாக ட்வீட் செய்தார். மேலும் விடியோ ஒன்றையும் அதனுடன் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Ppl been asking who tweets for this guy..I'm coming clean..it's me..Pidi..I'm way