கடல்நீரை குடிநீராக்கி ரூ.5க்கு ஒரு லிட்டர் குடிநீர்: நிதின் கட்கரி தகவல்

கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்தி நாட்டு மக்களுக்கு விரைவில் ரூ.5க்கு ஒரு லிட்டர் குடிநீர் வழங்கப்படும் என்று மத்திய நீர்வளத் துறை இணை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.
கடல்நீரை குடிநீராக்கி ரூ.5க்கு ஒரு லிட்டர் குடிநீர்: நிதின் கட்கரி தகவல்


போபால்: கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்தி நாட்டு மக்களுக்கு விரைவில் ரூ.5க்கு ஒரு லிட்டர் குடிநீர் வழங்கப்படும் என்று மத்திய நீர்வளத் துறை இணை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.

தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் சோதனை முறையில் தொடங்கியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

போபாலில் நடைபெற்ற நதி மஹோத்சவ் துவக்க விழாவில் கலந்து கொண்டு பேசிய கட்கரி, இந்தியாவில் உள்ள சில மாநிலங்கள் நதி நீருக்காக சண்டையிட்டுக் கொள்கின்றன. ஆனால், இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு 6 நதிகள் மூலம் நீர் சென்று கொண்டிருப்பதை யாரும் கவனிக்கவில்லை என்று கூறினார்.

இந்தியாவில் இருந்து 3 நதிகளில் தண்ணீர் பாகிஸ்தானுக்கு பாய்ந்து கொண்டிருக்கிறது. இது பற்றி எந்த ஊடகமும் எழுதவில்லை. எந்த எம்எல்ஏவும் இதனை நிறுத்துமாறு கூறவில்லை என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com