தேவை ஏற்படின் இந்திய படைகள் எல்லைத் தாண்டும்: எச்சரிக்கிறார் ராஜ்நாத்

உலகில் உள்ள எந்த சக்தியாலும் இந்தியாவிடம் இருந்து காஷ்மீரை பிரிக்க முடியாது, தேவை ஏற்படின் இந்தியப் படைகள் எல்லைத் தாண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தேவை ஏற்படின் இந்திய படைகள் எல்லைத் தாண்டும்: எச்சரிக்கிறார் ராஜ்நாத்


புது தில்லி: உலகில் உள்ள எந்த சக்தியாலும் இந்தியாவிடம் இருந்து காஷ்மீரை பிரிக்க முடியாது, தேவை ஏற்படின் இந்தியப் படைகள் எல்லைத் தாண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

காஷ்மீர் முன்பும் சரி, தற்போதும், எதிர்காலத்திலும் இந்தியாவினுடையதுதான். அதனை எங்களிடம் இருந்து எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது என்று ரைஸிங் இந்தியா மாநாட்டில் கலந்து கொண்ட ராஜ்நாத் சிங் கூறினார்.

நாட்டைப் பாதுகாப்பதில் இந்திய ராணுவத்துக்கு இருக்கும் பொறுப்புணர்ச்சியை பாராட்டிய ராஜ்நாத் சிங், நாட்டுக்குள் மட்டுமல்ல, தேவை ஏற்படின், நாட்டைக் காக்க நாட்டின் எல்லையையும் தாண்டுவோம் என்று பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

பயங்கரவாதத்துக்கு உதவுவதை நிறுத்தினால், பாகிஸ்தானுடன் நல்லுறவை ஏற்படுத்திக் கொள்ள இந்தியா விரும்பும் என்றும் அவர் தெரிவித்தார்.

தற்போது அமெரிக்காவும் பாகிஸ்தானை கண்டிக்க ஆரம்பித்துவிட்டது. பாகிஸ்தானுக்கு தற்போது என்னவானது என்று தெரியவில்லை. அந்நாட்டுடன் நட்பு பாராட்டவே நாங்கள் விரும்புகிறோம். ஆனால் எங்கள் நட்பை ஏற்க பாகிஸ்தான் விரும்பவில்லை என்றும் அவர் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com