காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சனிக்கிழமை (மார்ச் 24) முதல் கர்நாடகத்தில் மீண்டும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தல் வெகு விரைவில் நடக்கவிருக்கிறது. இந்த நிலையில், மக்களின் ஆதரவைப் பெறுவதற்காக காங்கிரஸ், பாஜக, மஜத ஆகிய கட்சிகளின் தலைவர்கள் கடந்த பல மாதங்களாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
கடந்த பிப்ரவரியில் கர்நாடகத்தில் சுற்றுப்பயணத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, கொப்பள், பெல்லாரி, ராய்ச்சூரு, யாதகிரி, கலபுர்கி, பீதர் மாவட்டங்களில் பிரசாரம் செய்தார். இரண்டாம் கட்டமாக பெலகாவி, விஜயபுரா, பாகல்கோட், தார்வாட் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அண்மையில் மூன்றாம் கட்டமாக மார்ச் 20-ஆம் தேதிமுதல் கர்நாடகத்தில் சுற்றுப்பயணம் செய்த ராகுல் காந்தி, உடுப்பி, தென்கன்னடம், சிக்மகளூரு,ஹாசன் மாவட்டங்களில் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
இந்நிலையில், அவர் தனது நான்காம் கட்ட சுற்றுப்பயணத்தை கர்நாடகத்தில் மார்ச் 24-ஆம் தேதி முதல் தொடங்குகிறார். 24, 25-ஆம் தேதிகளில் சாமராஜ்நகர், மண்டியா, மைசூரு மாவட்டங்களில் ராகுல் காந்தி சுற்றுப்பயணம் செய்யவிருக்கிறார். 24-ஆம் தேதி மைசூருக்கு விமானம் மூலம் வரும் அவர், அங்குள்ள சாமுண்டிமலையில் சிறப்பு வழிபாடு
நடத்துகிறார்.