உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், தில்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் ஞாயிற்றுக்கிழமை புழுதிப் புயல் தாக்கியது. அப்போது இடி, மின்னலுடன் பெய்த கன மழையில் சுமார் 134 பேர் உயிரிழந்தனர். மேலும் 400-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்நிலையில், உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் சம்பால் மாவட்டத்தில் அமைந்துள்ள ராஜ்புரா என்ற பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு மின்னல் தாக்கியது. இதனால் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து நாசமாயின.
இச்சம்பவத்தில் தீயணைக்கம் பணியில் 3 தீயணைப்பு வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விபத்தில் பொருட்சேதம் ஏற்பட்டாலும், உயிர்ச்சேதம் குறித்த எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. சம்பவ இடத்தில் மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.