பாஜக பேரம்: சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட உள்ள காங்கிரஸ் எம்எல்ஏக்கள்

கர்நாடகாவில் ஆட்சியமைக்கும் முனைப்போடு செயல்படும் பாஜகவின் பிடியில் இருந்து காப்பாற்ற, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட உள்ளனர்.
பாஜக பேரம்: சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட உள்ள காங்கிரஸ் எம்எல்ஏக்கள்


பெங்களூரு: கர்நாடகாவில் ஆட்சியமைக்கும் முனைப்போடு செயல்படும் பாஜகவின் பிடியில் இருந்து காப்பாற்ற, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட உள்ளனர்.

மதசார்பற்ற ஜனதா தளக் கட்சித் தலைவர் குமாரசாமி, இன்று மாலை 4 மணியளவில் ஆளுநர் வஜுபாய் வாலாவை சந்தித்து, கர்நாடகாவில் ஆட்சியமைக்க அழைப்பு விடுக்குமாறு வலியுறுத்த உள்ளார். அவருடன், கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் பரமேஸ்வராவும் செல்ல விருக்கிறார்.

இந்த நிலையில், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 78 பேரும் மைசூரு சாலையில் உள்ள தானியாருக்கு சொந்தமான சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, பாஜகவுக்கு ஆதரவு தெரிவிக்க, காங்கிரஸ் மற்றும் மஜத கட்சி எம்எல்ஏக்களிடம் பேரம் பேசப்பட்டதாகவும், அமைச்சர் பதவி மற்றும் ரூ.100 கோடி பணம் தரப்படும் என்று பாஜக தரப்பில் உறுதி மொழி அளிக்கப்பட்டதாகவும் குமாரசாமி கூறியுள்ளார். தங்களது 4 எம்எல்ஏக்களிடம் பாஜக பேரம் பேச முயற்சித்ததாகவும் அவர் பகிரங்கமாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

இதற்கிடையே, காங்கிரஸ் மற்றும் மஜத எம்எல்ஏக்களிடம் எப்படியாவது குதிரை பேரத்தில் ஈடுபட்டு, ஆட்சியமைக்க முயற்சிக்குமாறு பாஜகவினருக்கு மோடி உத்தரவிட்டிருப்பதாக, சித்தராமையா கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com