இந்தியா
காவிரி பிரச்னையில் இறுதி முடிவெடுக்க ஆணையத்திற்கே அதிகாரம் உள்ளது: மத்திய அரசு
காவிரி பிரச்னையில் இறுதி முடிவெடுக்க ஆணையத்திற்கே அதிகாரம் உள்ளது என்று திருத்தப்பட்ட வரைவு திட்டத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
காவிரி பிரச்னையில் இறுதி முடிவெடுக்க ஆணையத்திற்கே அதிகாரம் உள்ளது என்று திருத்தப்பட்ட வரைவு திட்டத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
காவிரி விவகாரத்தில் திருத்தப்பட்ட வரைவு திட்டத்தை மத்திய அரசு இன்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதில், காவிரி பிரச்னையில் இறுதி முடிவெடுக்க ஆணையத்திற்கே அதிகாரம் உள்ளது என்றும் நீர் திறக்காவிட்டால் அல்லது தாமதப்படுத்தினால் ஆணையமே நடவடிக்கை எடுக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் மாநிலங்கள் ஒத்துழைக்காவிட்டால் மட்டும் மத்திய அரசின் உதவியை நாடலாம் என திருத்தப்பட்ட வரைவு திட்டத்தில் தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனிடையே திருத்தப்பட்ட வரைவு திட்டம் மீதான தீர்ப்பு நாளை மாலை 4 மணிக்கு வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.