கர்நாடக சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக இருவர் பெயர் பரிந்துரை

கர்நாடக சட்டப்பேரவையில் தற்காலிக சபாநாயகராக இருவர் பெயரை ஆளுநர் பரிந்துரைத்துள்ளார். 
கர்நாடக சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக இருவர் பெயர் பரிந்துரை

கர்நாடக சட்டப்பேரவையில் தற்காலிக சபாநாயகராக இருவர் பெயரை ஆளுநர் பரிந்துரைத்துள்ளார். 

எடியூரப்பா முதல்வராக பதவியேற்றதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் , மஜத கூட்டாக வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. 

வழக்கில் காரசார விவாதம் நடைபெற்ற நிலையில் நாளையே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் கர்நாடக சட்டப்பேரவையில் தற்காலிக தலைவராக காங்கிரஸின் தேஷ்பாண்டே & பாஜகவின் உமேஷ் கட்டி ஆகிய இருவரின் பெயர்களை ஆளுநர் வஜூபாய் வாலா பரிந்துரைத்துள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com