பெண்கள், குழந்தைகளை தொந்தரவு செய்தால் கைகளை வெட்டுவேன்: அமைச்சர் மகனின் அவேச பேச்சால் பரபரப்பு 

பெண்கள் மற்றும் குழந்தைகளை தொந்தரவு செய்யும் நபர்களின் கைகளை வெட்டுவேன் என் உத்தரபிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில்
பெண்கள், குழந்தைகளை தொந்தரவு செய்தால் கைகளை வெட்டுவேன்: அமைச்சர் மகனின் அவேச பேச்சால் பரபரப்பு 

  
பெண்கள் மற்றும் குழந்தைகளை தொந்தரவு செய்யும் நபர்களின் கைகளை வெட்டுவேன் என் உத்தரபிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் அமைச்சர் ஓம் பிரகாஷ் ராஜ்பாரின் மகன் ராஜ்பார் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

உத்தரபிரதேச மாநில அமைச்சர் ஓம் பிரகாஷ் ராஜ்பரின் மகனும் சுகல்தேவ் பாரதிய சமாஜ் கட்சியின் தலைவருமான அரவிந்த் ராஜ்பர் சண்டவ்லியில் நேற்று திங்கள்கிழமை நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார். 
அப்போது, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்தும், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றும் ஆவேசமாக பேசினார்.

பெண்கள் மற்றும் குழந்தைகளை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்யும் நபர்களின் கைகளை வெட்டுவேன். எங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் இதுபோன்ற குற்றவாளிகளை இல்லாமல் செய்துவிடுவோம் என்று அரவிந்த் பேசினார். 

கடுமையான சட்டங்கள் இல்லாவிட்டால், இந்த அழுக்கு மனப்பான்மை மக்கள் எப்பொழுதும் நம்மைச் சுற்றி இருப்பார்கள், இந்த மக்களுக்கு எதிராக குரல்களை எழுப்பவும், எஃப்.ஐ.ஆர்களை பதிவு செய்யவும் கூடாது, அத்தகையர்களை வெளிநாடுகளில் உள்ள கடுமையான சட்டங்கள் போல் குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டும் என்றும் ஓம் பிரகாஷ் ராஜ்பார் கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com