முன்னாள் மத்திய அமைச்சரின் மகன் மாரடைப்பால் மரணம்

முன்னாள் மத்திய அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயாவின் மகன் வைஷ்ணவ் தேவ் (21) மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

முன்னாள் மத்திய அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயாவின் மகன் வைஷ்ணவ் தேவ் (21) மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.
"எம்பிபிஎஸ் 3-ஆம் ஆண்டு படித்துவந்த வைஷ்ணவ், செவ்வாய்க்கிழமை இரவு வீட்டில் இருந்தபோது நெஞ்சு வலிப்பதாகக் கூறி கீழே விழுந்தார். இதையடுத்து, குடும்பத்தினர் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எனினும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்' என்று பாஜக செய்தித்தொடர்பாளர் கிருஷ்ணசாகர் ராவ் தெரிவித்தார். ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானா ஆளுநர் ஈ.எஸ்.எல்.நரசிம்மன், தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் ஆகியோர் இரங்கல் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com