தொடர்ந்து 12-ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 12-ஆவது நாளாக இன்றும் (வெள்ளிக்கிழமை) பெட்ரோல் 32 காசுகளும், டீசல் 18 காசுகளும் உயர்ந்துள்ளன.
தொடர்ந்து 12-ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலை அடுத்து நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை அதிகரிக்க பெட்ரோல், டீசல் விலையும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அதற்கேற்ப அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் குறைந்து கொண்டே இருக்கிறது. இதுவும், இந்தியாவின் விலைவாசியை பாதித்துள்ளது. 

இன்று காலை 6 மணிக்கு அமலான புதிய பெட்ரோல், டீசல் விலை முறையே 32 காசுகள் மற்றும் 18 காசுகள் உயர்ந்துள்ளன. அதன்படி சென்னையில் பெட்ரோல் விலை 80.80 ரூபாய்க்கும், டீசல் விலை 72.58 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. 

தில்லியில் 77.83 ரூபாய்க்கு பெட்ரோலும், டீசல் 68.75 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. கொல்கத்தாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை முறையே 80.47 மற்றும் 71.30 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதிகபட்சமாக மும்பையில் பெட்ரோல் விலை 85.65 ரூபாய்க்கும், டீசல் விலை 73.20 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

இந்த தொடர் பெட்ரோல் விலை உயர்வால் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று (வியாழக்கிழமை) ட்விட்டரில் கோலியின் உடற்தகுதி சவாலை ஏற்ற மோடி அவர்களே, பெட்ரோல் டீசல் விலையை குறையுங்கள் என்ற எனது சவாலையும் ஏற்றுக்கொள்ளுங்கள் என்று குறிப்பிட்டிருந்தார். 

இந்நிலையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலை 12-ஆவது நாளாக இன்றும் உயர்த்தப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com