மோடியும், அமித் ஷாவும் நாட்டுக்கு ஆபத்தானவர்கள்: காங்கிரஸ் சாடல்

பாஜக கூட்டணியின் நான்கு ஆண்டுகால ஆட்சியின் விளைவாக பிரதமர் நரேந்திர மோடி, அக்கட்சியின் தலைவர் அமித் ஷா ஆகிய இருவரும் நாட்டுக்கு ஆபத்தானவர்கள் என்பதை மக்கள் உணர்ந்திருப்பார்கள் என்று

பாஜக கூட்டணியின் நான்கு ஆண்டுகால ஆட்சியின் விளைவாக பிரதமர் நரேந்திர மோடி, அக்கட்சியின் தலைவர் அமித் ஷா ஆகிய இருவரும் நாட்டுக்கு ஆபத்தானவர்கள் என்பதை மக்கள் உணர்ந்திருப்பார்கள் என்று காங்கிரஸ் கூறியுள்ளது.
 பாஜக அரசின் நான்கு ஆண்டுகால நிறைவையொட்டி, ஏமாற்றப்பட்ட இந்தியா என்ற தலைப்பில் கையேடு ஒன்றை தில்லியில் காங்கிரஸ் கட்சி சனிக்கிழமை வெளியிட்டது.
 காங்கிரஸ் கட்சியின் செய்தித்துறை பொறுப்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா, கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவருமான குலாம் நபி ஆசாத், கட்சியின் பொதுச் செயலாளர் அசோக் கெலாட் உள்ளிட்டோர் அந்தக் கையேட்டை வெளியிட்டனர். பின்னர் அவர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். ரண்தீப் சுர்ஜேவாலா பேசுகையில், "மோடியும், அமித் ஷாவும் நாட்டுக்கு ஆபத்தானவர்கள் என்பதை மக்கள் தற்போது உணர்ந்திருப்பார்கள். நான்கு ஆண்டுகால ஆட்சியை நான்கு வார்த்தைகளில் சொல்ல வேண்டும் என்றால் துரோகம், தந்திரம், பழிவாங்குதல், பொய் என்று குறிப்பிடலாம்'' என்றார்.
 தலித்துகள், பழங்குடியினர், பெண்கள் உள்ளிட்டோருக்கு எதிரான அத்துமீறல்களை குலாம் நபி ஆசாத் பட்டியலிட்டார். ""பாஜக ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை. அனைவரும் தூக்கத்தை இழந்து தவிக்கின்றனர்'' என்று அவர் கூறினார்.
 அசோக் கெலாட் பேசுகையில், மோடியின் நான்கு ஆண்டுகால ஆட்சியில் பயம், வெறுப்புணர்வு, வன்முறை ஆகிய சூழல்களே நாட்டில் நிலவுவதாகத் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com