அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டியூஷன் நடத்தத் தடை 

புதுச்சேரி அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் தனியாக டியூசன் நடத்துவதற்கு தடை விதித்து அம்மாநில பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.  
அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டியூஷன் நடத்தத் தடை 

புதுச்சேரி: புதுச்சேரி அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் தனியாக டியூசன் நடத்துவதற்கு தடை விதித்து அம்மாநில பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.  

புதுச்சேரி மாவட்டத்திற்கு உட்பட்ட அரசுப்  பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் பலபேர் தனியாக டியூசன் எனப்படும் சிறப்பு வகுப்புகள் எடுப்பதாக அம்மாநில பள்ளிக்கல்வி துறைக்கு ஏராளமான புகார்கள் சென்றன.

அதன் தொடர்ச்சியாக புதுச்சேரி அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் தனியாக டியூசன் நடத்துவதற்கு தடை விதித்து அம்மாநில பள்ளிக்கல்வித்துறை தற்பொழுது உத்தரவிட்டுள்ளது.  

இந்த உத்தரவை மீறும் ஆசிரியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள  உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com