மும்பை: மும்பையில் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா - ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தை வெள்ளியன்று காலை சந்தித்துப் பேசினார்.
மும்பையில் உள்ள பயாந்தர் பகுதியில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தேசிய செயற்குழுக் கூட்டம் வெள்ளியன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் மற்றும் பல்வேறு முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தின் இடையே பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா - ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தை சந்தித்துப் பேசினார்.
அவர்கள் இருவரும் என்ன பேசினார்கள் என்பதைக் குறித்து எவும் தெரிவிக்காத ஆர்எஸ்எஸ் வட்டாரங்கள், அமைப்பின் செயலாளர் பையா ஜி ஜோஷி விரைவில் செய்தியாளர்களிடம் இதுகுறித்து பேசுவார் என்று தெரிவித்தன.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக நிலத்தைக் கையகப்படுத்தி பாராளுமன்றத்தில் தனியாக சட்டம் இயற்ற வேண்டும் என்று சமீபத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பு தெரிவித்திருந்த சூழ்நிலையில், இந்த சந்திப்பு மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.