என் ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ அசோக் ஆனந்த் தகுதிநீக்கம்: புதுச்சேரி சபாநாயகர்

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற என் ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ அசோக் ஆனந்த் தகுதிநீக்கம் செய்யப்பட்டதாக புதுச்சேரி சபாநாயகர் வைத்திலிங்கம் அறிவித்துள்ளார். 
என் ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ அசோக் ஆனந்த் தகுதிநீக்கம்: புதுச்சேரி சபாநாயகர்

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற என் ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ அசோக் ஆனந்த் தகுதிநீக்கம் செய்யப்பட்டதாக புதுச்சேரி சபாநாயகர் வைத்திலிங்கம் அறிவித்துள்ளார். 

வருமானத்துக்கு அதிகமாக சொத்துகள் சேர்த்ததாக தொடுக்கப்பட்ட வழக்கில், புதுவை என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ. அசோக் ஆனந்த், அவரது தந்தை ஆகியோருக்கு தலா ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து புதுச்சேரி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் கடந்த மாதம் 30-ஆம் தேதி தீர்ப்பளித்தது. 

இந்நிலையில், அவருடைய தொகுதி காலியானதாக அறிவிக்கப்படுவதாகவும் அவரை தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் புதுச்சேரி சபாநாயகர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.    

வழக்கு விவரம்: 

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி என். ஆர். காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் அசோக் ஆனந்த். இவரது தந்தை ஆனந்தன். இவர், கடந்த 2007-2008 ஆம் ஆண்டு கால கட்டத்தில் புதுவை மாநில பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளராகப் பணிபுரிந்த போது, வருமானத்துக்கு அதிகமாக சொத்துகள் சேர்த்ததாக சிபிஐக்கு புகார் வந்தது.

இதன் பேரில், விசாரணை நடத்திய சிபிஐ அதிகாரிகள், ஆனந்தன் ரூ.3.15 கோடிக்கு அளவுக்கு சொத்துகள் குவித்ததாக வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் ஆனந்தன், அவரது மனைவி விஜயலட்சுமி, அவரது மகன் அசோக் ஆனந்த் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு மீதான விசாரணை புதுச்சேரி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இதனிடையே, விஜயலட்சுமி இறந்துவிட்டதால் வழக்கிலிருந்து அவரது பெயர் விடுவிக்கப்பட்டது. மீதியுள்ள இருவர் மீதும் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இறுதிக் கட்ட விசாரணை தலைமை நீதிபதி தனபால் முன்னிலையில் கடந்த 30-ஆம் தேதி நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி தனபால், குற்றஞ்சாட்டப்பட்ட எம்எல்ஏ அசோக் ஆனந்த், ஆனந்தன் ஆகியோருக்கு தலா ஓராண்டு சிறைத் தண்டனையும், தலா ஒரு லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். 

மேலும், அபராதம் செலுத்தத் தவறினால் தலா 3 மாதம் கடுங்காவல் சிறைத் தண்டனை அனுபவிக்கவும், வருமானத்துக்கு அதிகமாக சேர்க்கப்பட்ட ரூ. 1.57 கோடி மதிப்புள்ள சொத்துகளை பறிமுதல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com