பன்றிக் காய்ச்சலை குணப்படுத்தும் மருந்துகள் அரசு மருத்துவமனையில் உள்ளன: அமைச்சர் விஜயபாஸ்கர்

காய்ச்சல் வந்தால் பொதுமக்கள் உடனடியாக அரசு மருத்துவமனையை நாட வேண்டும் என்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
பன்றிக் காய்ச்சலை குணப்படுத்தும் மருந்துகள் அரசு மருத்துவமனையில் உள்ளன: அமைச்சர் விஜயபாஸ்கர்


சென்னை: காய்ச்சல் வந்தால் பொதுமக்கள் உடனடியாக அரசு மருத்துவமனையை நாட வேண்டும் என்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

பன்றிக் காய்ச்சலை முழுமையாகக் குணப்படுத்தக் கூடிய மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் இருக்கின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், சென்னையில் 70 பேர் காய்ச்சலுக்கும், 15 பேர் டெங்கு காய்ச்சலுக்கும் சிகிச்சை பெற்று வருகின்றனர். நுரையீரல் பாதிப்பு உள்ளவர்களுக்கு பன்றிக் காய்ச்சல் வந்தால் விரைந்து சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். காய்ச்சலுக்கு சுய மருத்துவம் செய்து கொள்ளக் கூடாது. டெங்கு காய்ச்சல் வந்தால் பாரசிட்டமால் மருந்தோ அல்லது ஊசியோ போட்டுக் கொள்ளக் கூடாது. காய்ச்சல் வந்தால் உடனே மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்து கொள்வது நல்லது என்று தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com