தெலங்கானாவில் வென்று ஆட்சியமைத்தால் ஹைதராபாத்தின் பெயரை மாற்றுவோம்: பாஜக 

தெலங்கானா மாநிலத்துக்கு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் வென்று ஆட்சிக்கு வந்தால், ஹைதராபாத்தின் பெயரை மாற்றுவோம் என்று பாஜக தெரிவித்துள்ளது.
தெலங்கானாவில் வென்று ஆட்சியமைத்தால் ஹைதராபாத்தின் பெயரை மாற்றுவோம்: பாஜக 


ஹைதராபாத்: தெலங்கானா மாநிலத்துக்கு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் வென்று ஆட்சிக்கு வந்தால், ஹைதராபாத்தின் பெயரை மாற்றுவோம் என்று பாஜக தெரிவித்துள்ளது.

இது குறித்து பாஜகவின் மாநிலத் தலைவர் ராஜா சிங் கூறுகையில், தெலங்கானாவுக்கு டிசம்பர் 7ம் தேதி நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் வென்று பாஜக ஆட்சி அமைத்தால், எங்களது முதல் குறிக்கோள் மாநிலத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வதுதான். இரண்டாவது லட்சியம், ஹைதராபாத்தின் பெயரை மாற்றுவதுதான். தெலங்கானா உட்பட நாட்டின் நலனுக்காக போராடிய மிகப்பெரிய தலைவர்களின் பெயரை ஹைதராபாத்துக்கு சூட்டுவோம் என்று தெரிவித்துள்ளார்.

ஹைதராபாத் மட்டுமல்ல, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளை அதாவது செகுந்தராபாத், கரீம்நகர் போன்ற நகரங்களின் பெயர்களையும் மாற்றுவோம் என்று பாஜக தரப்பில் கூறப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com