குஜராத் கலவரத்தின்போது குல்பர்க் சொசைட்டி எனுமிடத்தில் கடந்த 2002-ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட படுகொலைத் தொடர்பான வழக்கை விசாரித்த எஸ்ஐடி சிறப்பு நீதிமன்றம், 24 பேரை குற்றவாளிகளாக அறிவித்தது. அவர்களில் 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதனிடையே பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு இந்த கலவரத்தில் எந்த சம்பந்தமும் இல்லை என எஸ்ஐடி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்நிலையில், எஸ்ஐடி சிறப்பு நீதிமன்றம் இந்த தீர்ப்பை எதிர்த்து முன்னாள் காங்கிரஸ் எம்பி இஷான் ஜாஃப்ரி மனைவி ஸாகியா ஜாஃப்ரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து இவ்வழக்கு மீதான விசாரணை நவம்பர் 19-ஆம் தேதி நடைபெறவுள்ளது.