ஜம்மு: பாஜகவில் இணைந்த சுயேச்சை கவுன்சிலர்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சமீபத்தில் வெற்றி பெற்ற சுயேச்சை கவுன்சிலர் உள்ளிட்ட பலர் பாஜகவில் திங்கள்கிழமை இணைந்தனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சமீபத்தில் வெற்றி பெற்ற சுயேச்சை கவுன்சிலர் உள்ளிட்ட பலர் பாஜகவில் திங்கள்கிழமை இணைந்தனர். புதிதாக கட்சியில் இணைந்தவர்கள் கட்சியின் வளர்ச்சிக்காக பாடுபடுவார்கள் என கட்சியின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
 பிஸ்னா நகராட்சியின் 9வது வார்டு சுயேச்சை கவுன்சிலர் ராஜன் சர்மா, சமூக ஆர்வலர் ரிடா ஷலோத்ரா, ஓய்வுபெற்ற அரசு அதிகாரி மதன் செளதரி, தார்ஸம் சிங், மன்மோகன் லால், யாஷ்பால், அமித் செளதரி, விக்ரம் சானோத்ரா, நவீன் சிங், காஜன் தேவி மற்றும் ராஜ்குமார் உள்ளிட்ட பலர் பாஜகவில் இணைந்தனர்.
 புதிதாக கட்சியில் இணைந்தவர்களை பாஜக எம்.பி ஜூகல் கிஷோர் வரவேற்றார். பின்னர் அவர் கூறுகையில், பிரதமர் நரேந்திர மோடியின் வலுவான மற்றும் தீர்க்கமான கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு அதிக எண்ணிக்கையிலான மக்கள் பாஜகவில் இணைந்து வருகின்றனர் என்று தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com