ஸ்ரீஹரிகோட்டா: ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் விண்வெளி நிலையத்தில் இருந்து ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் திட்டமிட்டபடி வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ஜிஎஸ்எல்வி மாக்-3 ராக்கெட் 3,423 கிலோ எடை கொண்ட தாகும். இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப செயல்பட்டை மேம்படுத்த உதவும் ஜிசாட் 29 செயற்கைக்கோளினை மாக் 3 ராக்கெட் எடுத்துச் சென்றுள்ளது.
இதன் ஆயுட்காலம் 10 ஆண்டுகள் ஆகும். இதனை ஏவுவதற்கான கவுண்ட் டவுன் செவ்வாயன்று துவங்கியது.
இந்நிலையில் ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் விண்வெளி நிலையத்தில் இருந்து ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் திட்டமிட்டபடி புதன் மாலை வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
விஞ்ஞானிகள் அளித்துள்ள தகவலின்படி ஏவப்பட்ட 17 நிமிடங்களில் ராக்கெட்டானது, உரிய சுற்று வட்டப் பாதையில் செயற்கைகோளினை நிலை நிறுத்தும் என்று தெரிகிறது.