ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில்  பாய்ந்தது 

ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் விண்வெளி நிலையத்தில் இருந்து  ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் திட்டமிட்டபடி வெற்றிகரமாக விண்ணில்  ஏவப்பட்டது.  
ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில்  பாய்ந்தது 

ஸ்ரீஹரிகோட்டா: ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் விண்வெளி நிலையத்தில் இருந்து  ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் திட்டமிட்டபடி வெற்றிகரமாக விண்ணில்  ஏவப்பட்டது.  

முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ஜிஎஸ்எல்வி மாக்-3 ராக்கெட் 3,423 கிலோ எடை கொண்ட தாகும். இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப செயல்பட்டை மேம்படுத்த உதவும் ஜிசாட் 29  செயற்கைக்கோளினை மாக் 3 ராக்கெட் எடுத்துச் சென்றுள்ளது. 

இதன் ஆயுட்காலம் 10 ஆண்டுகள் ஆகும்.  இதனை ஏவுவதற்கான கவுண்ட் டவுன் செவ்வாயன்று துவங்கியது. 

இந்நிலையில் ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் விண்வெளி நிலையத்தில் இருந்து  ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் திட்டமிட்டபடி புதன் மாலை வெற்றிகரமாக விண்ணில்  ஏவப்பட்டது.  

விஞ்ஞானிகள் அளித்துள்ள தகவலின்படி ஏவப்பட்ட 17 நிமிடங்களில் ராக்கெட்டானது, உரிய சுற்று வட்டப் பாதையில் செயற்கைகோளினை நிலை நிறுத்தும் என்று தெரிகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com