சபரிமலையில் பாஜக, இந்து அமைப்புகள் திடீர் முழு அடைப்புப் போராட்டம்

பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் சபரிமலை ஐயப்பன் கோயில் நடை வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. 
சபரிமலையில் பாஜக, இந்து அமைப்புகள் திடீர் முழு அடைப்புப் போராட்டம்

சுவாமியே சரணம் ஐயப்பா என்ற கோஷங்களுக்கு மத்தியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் சபரிமலை ஐயப்பன் கோயில் நடை வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. 

அங்கு, தலைமை தந்திரி கண்டரரூ ராஜீவரு, திரளான பக்தர்கள் குழுமியிருந்தனர். நூற்றுக்கணக்கான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், சபரிமலைக்குச் சென்ற இந்து ஐக்கிய வேதி அமைப்பின் மாநிலத் தலைவி சசிகலா (56) கைதுசெய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் பாஜக, இந்து ஐக்கிய வேதி பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் திடீர் முழு அடைப்புப் போராட்டம் சனிக்கிழமை நடைபெறுகிறது.

இதன்காரணமாக கன்னியாகுமரியிலிருந்து செல்லும்பேருந்து களியக்காவிளையில் நிறுத்தப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com