சிபிஐ சிறப்பு இயக்குநர் அஸ்தானா வழக்கை விசாரிக்கும் சிபிஐ அதிகாரி இடமாற்றத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

சிபிஐ சிறப்பு அதிகாரி ராகேஷ் அஸ்தானாவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்து வந்த சிபிஐ அதிகாரி நாக்பூருக்கு இடமாற்றம் செய்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.
சிபிஐ சிறப்பு இயக்குநர் அஸ்தானா வழக்கை விசாரிக்கும் சிபிஐ அதிகாரி இடமாற்றத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

சிபிஐ சிறப்பு அதிகாரி ராகேஷ் அஸ்தானாவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்து வந்த சிபிஐ அதிகாரி நாக்பூருக்கு இடமாற்றம் செய்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். 

சர்ச்சைக்குரிய இறைச்சி ஏற்றுமதியாளர் மொயின் குரேஷி தொடர்புடைய வழக்கில், ஹைதராபாதைச் சேர்ந்த தொழிலதிபர் சதீஷ் சனாவை விடுவிக்க லஞ்சம் பெற்றதாக சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா, சிபிஐ காவல் துறை துணை கண்காணிப்பாளர் தேவேந்தர் குமார் ஆகியோர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. இதையடுத்து, இந்த வழக்கை விசாரித்து வந்த விசாரணை குழுவில் இடம்பெற்றிருந்த சிபிஐ அதிகாரி மனீஷ் குமார் சின்ஹா மகாராஷ்டிர மாநிலம் நாக்பூருக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.  

இந்நிலையில், சிபிஐ அதிகாரி இந்த நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்துள்ள மனுவை அவசர வழக்காக விசாரிக்கவேண்டும் என்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான நீதிபதிகள் எஸ் கே கௌல் மற்றும் கே எம் ஜோசப் அமர்விடம் குறிப்பிட்டார். 

தனக்கு அரசு கட்டாய விடுப்பு அளிக்கப்பட்டதை எதிர்த்து சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா தொடர்ந்த வழக்கை இதே அமர்வு நாளை (செவ்வாய்கிழமை) விசாரிக்கிறது. இந்த வழக்கு விசாரணையுடன் இணைத்து தனது வழக்கையும் விசாரிக்குமாறு சிபிஐ அதிகாரி மனீஷ் குமார் சின்ஹா கேட்டுக்கொண்டார். 

நாக்பூருக்கு இடமாற்றம் செய்யப்பட்டதால், அஸ்தானாவுக்கு எதிரான வழக்கில் இருந்து தான் வெளியேற்றப்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com