சபரிமலையில் தடையை மீறி போராட்டம்: 68 பக்தர்கள் கைது

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட 68 பக்தர்களை போலீஸார் கைது செய்துள்ளதாக போலீஸார் இன்று (திங்கள்கிழமை) தெரிவித்தனர்.
சபரிமலையில் தடையை மீறி போராட்டம்: 68 பக்தர்கள் கைது

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட 68 பக்தர்களை போலீஸார் கைது செய்துள்ளதாக போலீஸார் இன்று (திங்கள்கிழமை) தெரிவித்தனர்.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயதுப் பெண்களும் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் கடந்த செப்டம்பர் மாதம் 28-ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது. இதைத்தொடர்ந்து, தொடரப்பட்ட வழக்கில், 28-ஆம் தேதி வழங்கப்பட்ட தீர்ப்புக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. இதையடுத்து, சபரிமலை கோயில் நடை கடந்த 17-ஆம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. கோயில் நடை 2 மாதங்களுக்கு திறக்கப்பட்டிருக்கும். 

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்த மாநில அரசு முயற்சித்து வந்த நிலையில், பாஜக, ஆர்எஸ்எஸ், சங்க் பரிவார் அமைப்புகள், காங்கிரஸ் உள்ளிட்டவை கோயில் பாரம்பரியத்தை பாதுகாப்பதற்காக போராட்டம் நடத்தி வந்தனர். 

அதன் பகுதியாக நேற்று இரவு 200-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கோயில் நடை மூடிய பிறகும், ஐயப்ப கோஷங்களை எழுப்பியுள்ளனர். இதையடுத்து, அவர்களை கலைந்து செல்லுமாறு போலீஸார் அறிவுறுத்தினர்.  இருப்பினும், அவர்கள் கலைந்து செல்ல மறுத்ததால் 68 பக்தர்களை போலீஸார் கைது செய்து பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள போலீஸ் முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்கள் இன்று நீதிமன்றம் முன் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.  

இதுதொடர்பாக, எஸ்பி பிரதீஸ் குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், "கோயில் நடை 10 மணிக்கு மூடியதால் அவர்களை கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டது. ஆனால், அவர்கள் அந்த இடத்தில் இருந்து நகரக்கூட இல்லை" என்றார்.

மத்திய சுற்றுலாத்துறை இணை அமைச்சர் கேஜே அல்ஃபோன்ஸ் நிலக்கலில் பேட்டியளிக்கையில், "கேரள போலீஸார் எதற்காக தடை உத்தரவை பிறப்பித்துள்ளனர் என்று புரிந்துகொள்ளமுடியவில்லை. இந்த விஷயத்தை இப்படி கையாளக் கூடாது. சபரிமலை பக்தர்கள் ஒன்று பிரிவினைவாதிகள் அல்ல. இந்த இடத்தில் படைகளைபயன்படுத்தக்கூடாது. சபரிமலை கோயிலுக்கு வழங்கப்பட்ட மத்திய அரசின் நிதி எவ்வாறு பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை உறுதி செய்ய கோயிலுக்கு செல்கிறேன்" என்றார். 

இந்த சம்பவத்தை கண்டித்து சங்க் பரிவார் அமைப்புகள் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர். அதனால், கோழிகோட்டில் முதல்வர் பங்கேற்கும் நிகழ்வுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com