தமிழகத்தில் 3 இடங்கள் உள்பட நாடு முழுவதும் 55 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான ஒப்பந்தம் புதுதில்லியில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்னிலையில் திங்கள்கிழமை கையெழுத்தானது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் மற்றும் காவிரி டெல்டா பகுதியில் இரு இடங்களிலும் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி அளித்தது.
ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துக்கு சிதம்பரத்திலும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை உரிமையாளரான வேதாந்தா நிறுவனத்துக்கு காவிரி டெல்டா பகுதியிலும் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியதாவது:
தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க வேதாந்தா நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காவிரியை ஒட்டிய கடல் பகுதியில் இருந்துதான் ஹைட்ரோ கார்பன் எடுக்கப்படுகிறது. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிக்கமாட்டார்கள். தமிழகத்தில் காவிரிப்படுகை மற்றும் கடற்பகுதியின் 2 இடங்களில்தான் வேதாந்தா நிறுவனம் ஹைட்ரோகார்பன் எடுக்கும் என்பதால் பிரச்சினை வராது என்றார்.