காஷ்மீர் உள்ளாட்சித் தேர்தல்: இன்று 3-ஆம் கட்ட வாக்குப்பதிவு

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் அதிக சதவீத வாக்குகள் பதிவாகும் என்று தெரிகிறது

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் அதிக சதவீத வாக்குகள் பதிவாகும் என்று தெரிகிறது.
 மாநிலத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் 4 கட்டங்களாக நடைபெறுகிறது. கடந்த 8-ஆம் தேதி நடைபெற்ற முதல் கட்ட தேர்தலில் 8.3 சதவீத வாக்குகள் பதிவாகின. கடந்த 10-ஆம் தேதி நடைபெற்ற இரண்டாம் கட்ட தேர்தலில் ஜம்முவில் 78.6 சதவீத வாக்குகளும் காஷ்மீரில் 3.4 தவீத வாக்குகளும் பதிவாகின. இந்நிலையில், 3-ஆம் கட்ட தேர்தல் சனிக்கிழமை நடைபெறவுள்ளது.
 மூன்றாம் கட்டமாக, 207 வார்டுகளில் தேர்தல் நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் திட்டமிட்டிருந்தது. ஆனால், காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் 49 வார்டுகளில் போட்டியின்றி உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டனர். 58 வார்டுகளில் யாரும் போட்டியிடவில்லை. இதனால், 107 வார்டுகளில் தேர்தல் நடத்தப்படவில்லை.
 இந்நிலையில், அப்பகுதியில் உள்ள 44 வார்டுகள், ஜம்மு பகுதியில் உள்ள சம்பா மாவட்டத்தில் 56 வார்டுகள் என மொத்தம் 100 வார்டுகளில் மட்டுமே சனிக்கிழமை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. பாரமுல்லா மாவட்டத்தில் 13 வார்டுகளிலும், அனந்த்நாக் மாவட்டத்தில் 9 வார்டுகளிலும் அதிக வாக்குகள் பதிவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 பள்ளத்தாக்குப் பகுதியில் மொத்தமுள்ள 44 வார்டுகளில் 20 வார்டுகளில் கடந்த 1989-ஆம் ஆண்டில் பயங்கரவாதம் தலை தூக்கிய பிறகு குறைந்த அளவிலேயே வாக்குகள் பதிவாகின்றன.
 மொத்தமுள்ள 100 வார்டுகளிலும் வாக்குப்பதிவு காலை 6 மணிக்குத் தொடங்கி மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது. அசம்பாவிதம் எதுவுமின்றி தேர்தல் நடைபெற வேண்டும் என்பதை உறுதிசெய்வதற்காக, அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன தேர்தல் அதிகாரி ஒருவர் கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com