சத்தீஸ்கரில் நக்ஸலைட் சுட்டுக் கொலை

சத்தீஸ்கர் மாநிலம், சுக்மா மாவட்டத்தில் நக்ஸலைட் பயங்கரவாதியை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்.

சத்தீஸ்கர் மாநிலம், சுக்மா மாவட்டத்தில் நக்ஸலைட் பயங்கரவாதியை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்.
 இதுகுறித்து சுக்மா மாவட்ட காவல் துறைக் கண்காணிப்பாளர் அபிஷேக் மீனா கூறியதாவது:
 புஸ்னர் காவல் நிலையத்துக்கு உள்பட்ட வனப் பகுதியில்
 நக்ஸல்கள் நடமாட்டம் இருப்பதாகத் தகவல் கிடைத்தது. பாதுகாப்புப் படையினரும், போலீஸாரும் கடந்த வியாழக்கிழமை தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, கங்கேர் பள்ளத்தாக்கு பகுதியில் இருந்த மாவோயிஸ்டுகள் பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கியால் சுடத் தொடங்கினர். இதையடுத்து, இரு தரப்பினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இந்தச் சண்டையில் நக்ஸலைட் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். மற்றவர்கள் தப்பியோடி விட்டனர் என்று அபிஷேக் மீனா தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com