தில்லி அமைச்சர் வீட்டில் வருமானவரித்துறை சோதனை: ரூ.35 லட்சம் கறுப்புப் பணம் பறிமுதல் எனத் தகவல்

தில்லி அமைச்சர் வீட்டில் நடைபெற்ற வருமானவரித்துறை சோதனையில் ரூ.35 லட்சம் ரொக்கம் கறுப்புப் பணம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தில்லி அமைச்சர் வீட்டில் வருமானவரித்துறை சோதனை: ரூ.35 லட்சம் கறுப்புப் பணம் பறிமுதல் எனத் தகவல்

தில்லி அமைச்சர் வீட்டில் நடைபெற்ற வருமானவரித்துறை சோதனையில் ரூ.35 லட்சம் ரொக்கம் கறுப்புப் பணம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆம் ஆத்மி கட்சியச் சேர்ந்தவர்  கைலாஷ் கேலாட். நஜாஃப்கர் தொகுதி எம்எல்ஏ ஆவார். இவர் புது தில்லி போக்குவரத்துத்துறை, சட்ட மற்றும் வருவாய்த்துறை அமைச்சராக இருப்பவர். இவரது வீடு மற்றும் அலுவலகம் உள்ளிட்ட 16 இடங்களில் 60-க்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் கடந்த 3 நாட்களாக சோதனை மேற்கொண்டு வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில், ரூ.35 லட்சம் ரொக்கம் உள்ளிட்ட பினாமி சொத்துக்கள் தொடர்பான ஆவணங்களை வருமானவரித்துறை பறிமுதல் செய்துள்ளதாக சனிக்கிழமை தகவல்கள் வெளியாகின. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com