வங்கக் கடலில் உருவான டிட்லி புயல், ஒரிசா மற்றும் ஆந்திரா மாநிலங்களுக்கு இடையே கரையைக் கடந்தது.
மத்திய வங்கக் கடலின் மேற்கு பகுதியில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம் புயலாக உருவெடுத்தது. இந்த டிட்லி புயல் வடக்கு ஆந்திரா- தெற்கு ஒடிசா இடையே கோபால்பூர் பகுதியில் புயல் கரையைத் தாக்கியது. 165 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியதால் மரங்கள் வேரோடு சாய்ந்தன. புயல் காரணமாக வட ஆந்திரா மற்றும் ஒடிசாவின் 5 கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், டிட்லி புயல் காரணமாக ஒடிஸா மாநிலத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 26-ஆக செவ்வாய்கிழமை அதிகரித்தது. மொத்தம் 16 மாவட்டங்களில் உள்ள 7,402 கிராமங்களைச் சேர்ந்த 57.08 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 3.6 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கும், நிவாரண முகாம்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
டிட்லி புயல் காரணமாக 2.34 லட்சம் ஹெக்டோர் அளவிலான பயிர்கள் நாசமாகின.