ஹிந்து காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு தான் பிரசாரம் செய்வது விருப்பமில்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, மாநிலங்களவை எதிரிக்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத் லக்னௌவில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசியதாவது,
"யூத் காங்கிரஸ் காலத்தில் இருந்தே நான் அந்தமான் நிகோபார் முதல் லட்சத்தீவு வரை இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் பிரசாரம் மேற்கொண்டு வருகிறேன். இந்த பிரசாரங்களுக்கு என்னை அழைப்பவர்களில் 95 சதவீதம் பேர் ஹிந்து சகோதரர்கள். வெறும் 5 சதவீதம் மட்டுமே இஸ்லாமிய சகோதரர்களாக இருப்பர்.
ஆனால், கடந்த 4 ஆண்டுகளில் 95 ஆக இருந்த அந்த சதவீதம் 20 ஆக குறைந்ததை நான் கவனிக்கிறேன். அதனால், ஏதோ தவறாக உள்ளது. தங்களது வாக்கு வங்கி பாதிக்கப்படும் என்று பிரசாரத்துக்கு என்னை அழைக்க தயங்குகின்றனர்" என்றார்.
இவர், இதில் கடந்த 4 ஆண்டுகளில் தான் இந்த மாற்றம் என்பதை அழுத்தமாக கூறுவது மூலம் மறைமுகமாக பாஜக ஆட்சியை குற்றம்சாட்டுகிறார்.