இலங்கை பிரதமருடன் மன்மோகன் சிங், ராகுல் காந்தி சந்திப்பு

இந்தியாவுக்கு வருகை தந்துள்ள இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி ஆகியோர் வெள்ளிக்கிழமை சந்தித்தனர்.
இலங்கை பிரதமருடன் மன்மோகன் சிங், ராகுல் காந்தி சந்திப்பு

இந்தியாவுக்கு வருகை தந்துள்ள இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி ஆகியோர் வெள்ளிக்கிழமை சந்தித்தனர். 

3 நாள் அரசு முறைப் பயணமாக இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே நேற்று (வியாழக்கிழமை) இந்தியாவுக்கு வந்தார். இவர், இந்திய பிரதமர் மோடியுடன் சனிக்கிழமை பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இதற்கிடையே, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் சோனியா காந்தி ஆகியோர் இலங்கை பிரதமரை சந்தித்துப் பேசினார். 

இந்த சந்திப்பின் போது முன்னாள் மத்திய அமைச்சர் ஆனந்த் சர்மா மற்றும் இலங்கை அதிகாரிகளும் உடன் இருந்தனர். 

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவுடனான சந்திப்பு நன்றாக அமைந்தது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com