ஷீரடி: ஷீரடியில் உள்ள சாய்பாபா கோயிலுக்கு இன்று காலை வந்த பிரதமர் நரேந்திர மோடி, சுவாமி தரிசனம் செய்தார்.
ஷீரடி சாய் சமாதியிலும் வழிபட்ட பிரதமர் நரேந்திர மோடி, ஸ்ரீ சாய்பாபா சன்ஸ்தான் அறக்கட்டளை சார்பில் துவங்கும் பல்வேறு திட்டங்களையும் துவக்கி வைக்கிறார்.
ஷீரடி சாய்பாபா சமாதி அடைந்ததன் நூற்றாண்டை நினைவு கூரும் வகையில் வெள்ளி நாணயத்தையும் வெளியிடுகிறார் மோடி.