அமிருதசரஸ் ரயில் விபத்து தொடர்பாக ரயில்வே துறை மீது எந்த தவறும் இல்லை; அதனால் ரயில் ஓட்டுநர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது என்று அந்த துறையின் இணையமைச்சர் மனோஜ் சின்ஹா கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:
தசரா விழா போன்ற நிகழ்ச்சிகளுக்கு சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்கிறது. ஒருவேளை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தால் விபத்து தவிர்க்கப்பட்டிருக்கலாம். இருப்பினும், இந்த விபத்து தொடர்பாக, ரயில்வே பாதுகாப்பு ஆணையம் சார்பில் விசாரணை நடத்தப்படும்.