இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் எம்எல்ஏ பி.பி.அப்துல் ரஸாக் மாரடைப்பால் சனிக்கிழமை காலமானார்.
அவருக்கு வயது 63. உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவர் 3 தினங்களுக்கு முன்பு கேரள மாநிலம், காசர்கோடில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்தார். இந்நிலையில், சனிக்கிழமை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்தார்.
அவருக்கு மனைவியும், 3 மகள்கள் மற்றும் மகனும் உள்ளனர்.
மஞ்சேஸ்வரம் சட்டப்பேரவை தொகுதியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் போட்டியிட்டு எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார் அப்துல் ரஸாக்.
அவரது மறைவுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் இரங்கல் தெரிவித்தார்.