மத்திய அரசின் பெண் குழந்தைகள் பாதுகாப்போம் பிரசாரத்தை காங்கிரஸ் கட்சி கிண்டல் செய்யக்கூடாது என்று பாஜகவின் செய்தித்தொடர்பாளர் மீனாக்ஷி் லேகி தெரிவித்தார்.
இதுதொடர்பாக, தில்லியில் பேசிய அவர்,
"'பெண் குழந்தைகளை படிக்கவைப்போம், பாதுகாப்போம்' பிரசாரம் நாட்டில் உள்ள பெண் குழந்தைகளை பாதுகாப்பதற்கான மிகத் தீவிரமான பிரசாரம். இந்தப் பிரசாரத்தின் ஒரு அங்கமாக அரசு செயல்பட்டு வருகிறது. இந்தப் பிரசாரம் மூலம் பல மாநிலங்களில் பெண் குழந்தைகளின் கருகொலை வழக்குகள் குறைந்து வருகிறது. காங்கிரஸ் கட்சி மற்றும் ராகுல் காந்தி இந்த பிரசாரத்தை விமரிசிக்கவோ, கிண்டல் செய்யவோ கூடாது.
பாலியல் வன்கொடுமை செய்ததற்காக கேரள போலீஸார் சாண்டி உட்பட மற்றவர்கள் மீது வழக்கப்பதிவு செய்துள்ளனர்.
பாலியல் துன்புறுத்தல் வழக்குகளுக்கு முக்கியத்துவம் அளித்து கையாள வேண்டும். அரசியல் கட்சிகள் அதனை குலைக்கக் கூடாது" என்றார்.