இந்தியா - சீனா இடையேயான போர் முடிந்து சுமார் 56 ஆண்டுகளுக்குப் பிறகு அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த கிராமத்தினருக்கு ரூ.38 கோடி அளவுக்கு நிலத்துக்கான இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டது.
1962ம் ஆண்டு இந்தியா - சீனா இடையே போர் மூண்டபோது, ராணுவ முகாம்கள் அமைக்கவும், பங்கர்கள் மற்றும் பேரக்ஸ்கள் அமைக்கவும் கைப்பற்றப்பட்ட நிலங்களுக்கு இழப்பீடாக அருணாச்சலப்பிரதேச கிராமத்தினருக்கு ஒட்டுமொத்தமாக ரூ.38 கோடி இழப்பீடு வழங்கப்பட்டது.
கடந்த 56 ஆண்டுகளாக விவசாயிகளுக்கு இழப்பீடுத் தொகை வழங்கப்படாத நிலையில், தற்போதுதான் விவசாயிகள் இழந்த நிலங்களுக்கு இழப்பீட்டுத் தொகை பெற்றுள்ளனர்.
மேற்கு காமேங் மாவட்டத்தில் உள்ள கிராம மக்களிடம் நிலத்துக்கான இழப்பீட்டுத் தொகையை வழங்கும் நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது.