ஜம்மு-காஷ்மீரில் விடிய விடிய துப்பாக்கிச் சூடு: 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினரால் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ஜம்மு-காஷ்மீரில் விடிய விடிய துப்பாக்கிச் சூடு: 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினரால் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் எல்லையோரப் பகுதிகளில் ஊடுருவியுள்ள பயங்கரவாதிகளை ஒழுக்கும் விதமாக அங்கு ராணுவ நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 

இதனால் அங்கு கடந்த சில மாதங்களாக இரு தரப்புக்கும் இடையே துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் பயங்கரவாதிகள் பலர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இந்நிலையில், குல்கம் பகுதியில் அமைந்துள்ள சௌகம் எனுமிடத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பாதுகாப்புப் படை அதிகாரிகள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இதில் வெள்ளிக்கிழமை இரவு முதல் இருதரப்புக்கும் இடையில் நீடித்து வரும் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 3 பயங்கரவாதிகள் சனிக்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் பாராமுல்லா - காஸிங்கட் பகுதிகளுக்கு இடையிலான ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com