நான் அமைச்சர் என்பதால் பெட்ரோல், டீசல் விலை உயர்வு என்னை பாதிக்கவில்லை என்று மத்திய அமைச்சர் ராம்தாஸ் அதாவாலே தெரிவித்துள்ளார்.
பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் புதிய உச்சத்தை தொட்டு வருவதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதுதொடர்பாக, மத்திய அமைச்சர் ராம்தாஸ் அதாவாலே கூறுகையில்,
"பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்கள் பாதிப்புக்குள்ளாவது புரிகிறது. அதை குறைப்பது அரசின் பணி. மாநிலங்கள் வரிகளை குறைத்தால் பெட்ரோல், டீசல் விலை குறையும். இந்த விவகாரத்தில் மத்திய அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
நான் அமைச்சர் என்பதால் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் நான் பாதிப்படையவில்லை. அமைச்சர் பதவியை இழந்தால் நானும் பாதிக்கப்படுவேன்" என்றார்.