எல்லையில் அத்துமீறல்: ராணுவ வீரர் காயம்

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ரஜௌரி மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் அத்துமீறி பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியதில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் காயமடைந்தார்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ரஜௌரி மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் அத்துமீறி பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியதில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் காயமடைந்தார்.
 இதுதொடர்பாக ராணுவ செய்தித்தொடர்பாளர் கூறியதாவது:
 நௌஷெரா பகுதியில் இந்திய பாதுகாப்புச் சாவடிகள் இருந்த பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் சனிக்கிழமை 10.30 மணிக்கு துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், ராணுவ வீரர் ஒருவர் காயமடைந்தார். உதம்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர் நலமாக உள்ளார் என்று அந்த செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com