ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டப்பேரைவத் தேர்தல் நடைபெறவுள்ள சூழலில் அங்கு காங்கிரஸ் தலைவர் ராகுல், தீவிர தெருமுனைப் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகிறார். இதையடுத்து ஆகஸ்டு 11-ஆம் தேதி நடைபெற்ற ஒரு கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார்.
இந்நிலையில், தற்போது ராஜஸ்தான் மாநிலத்துக்கு 2-ஆவது முறையாகச் சென்று பிரசாரத்தில் ஈடுபட்டார். அங்குள்ள துங்கர்பூர் மாவட்டத்தில் அமைந்திருக்கும் சக்வாரா எனுமிடத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் பிரசார பொதுக்கூட்டத்தில் அக்கட்சித் தலைவர் ராகுல் பங்கேற்றார். அதில் அவர் பேசியதாவது:
வரும் காலங்களில் தேர்தலில் அதிகளவில் பெண்கள் போட்டியிட வேண்டும். ஏனெனில் இந்தியாவில் பெண்களின்றி எதுவும் நடக்காது. மத்தியில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அதிகளிவிலான வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்படும்.
நாம் பயன்படுத்தும் மொபைல் ஃபோன்களுக்குப் பின்புறம், ராஜஸ்தான் தயாரிப்பு அல்லது துங்கர்பூர் தயாரிப்பு என்ற நிலை உருவாக வேண்டும். அதை நான் பார்க்க வேண்டும் என்றார்.