முஸ்லிம் இடஒதுக்கீட்டில் சந்திரசேகர ராவ் ஏமாற்றுகிறார்: குலாம் நபி ஆசாத்

முஸ்லிம் இடஒதுக்கீடு விவகாரத்தில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் ஏமாற்றுவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், வியாழக்கிழமை தெரிவித்தார். 
முஸ்லிம் இடஒதுக்கீட்டில் சந்திரசேகர ராவ் ஏமாற்றுகிறார்: குலாம் நபி ஆசாத்

முஸ்லிம் இடஒதுக்கீடு விவகாரத்தில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் ஏமாற்றுவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், வியாழக்கிழமை தெரிவித்தார். 

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் முஸ்லிம்கள் மற்றும் பழங்குடியினருக்கு இடஒதுக்கீட்டில் அதிகப்படுத்தி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றினார். இதில் முஸ்லிம்களுக்கு 12 சதவீதம் உயர்த்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் இதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கவில்லை என்றால் உச்ச நீதிமன்றத்தை நாடப்போவதாக தெரிவித்தார். 

இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கூறுகையில்,

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் முஸ்லிம் இடஒதுக்கீட்டில் ஏமாற்றுகிறார். இந்த 12 சதவீத இடஒதுக்கீட்டை உச்ச நீதிமன்றம் நிராகரிக்கும் என்று தெரிந்தே வழக்கு தொடர்ந்துள்ளார். இது மக்களை ஏமாற்றும் செயலாகும். 

கடந்த 2004-ஆம் ஆண்டில் முஸ்லிம்களுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்படும் என்று காங்கிரஸ் அறிவித்திருந்தது. அப்போதைய ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி முஸ்லிம்கள் இடஒதுக்கீட்டை நிறைவேற்றினார். ஆனால் உச்ச நீதிமன்றம் 4 சதவீதம் மட்டுமே வழங்க முடியும் என்று தீர்ப்பளித்தது என்றார்.

தெலங்கானா மாநிலத்தில் சட்டப்பேரவை கலைக்கப்பட்டுள்ளது. எனவே அங்கு தேர்தல் நடைபெறவுள்ளது. இதையடுத்து அனைத்து கட்சித் தலைவர்களும் அங்கு தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மக்களிடம் பிரசாரம் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com