ராகுல் ஒரு 'கோமாளி இளவரசன்': அருண் ஜேட்லி

பொய் பரப்புரைகளை பரப்பி வரும் காங்கிரஸ் தலைவர் ராகுல் ஒரு கோமாளி இளவரசன் என்று மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி விமர்சித்துள்ளார்.
ராகுல் ஒரு 'கோமாளி இளவரசன்': அருண் ஜேட்லி

பொய் பரப்புரைகளை பரப்பி வரும் காங்கிரஸ் தலைவர் ராகுல் ஒரு கோமாளி இளவரசன் என்று மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டதாவது:

ரஃபோல் போர் விமான ஒப்பந்தம், 15 தொழிற்சாலைகளின் கடன் தள்ளுபடி உள்ளிட்டவைகளில் பொய் பரப்புரைகளை பரப்பி வரும் காங்கிரஸ் தலைவர் ராகுல் ஒரு கோமாளி இளவரசன். பொய்களை மட்டுமே நம்பியுள்ள இதுபோன்ற முதிர்ச்சி இல்லாதவர்கள் பொது வாழ்க்கைக்கு தகுதி இல்லாதவர்கள்.

பொது வாழ்க்கை என்பது மிகவும் முக்கியமானது. இது ஒன்றும் சிரிப்பு வரவழைக்கும் சவால் நிகழ்ச்சி அல்ல. கட்டிப்பிடப்பது, கண் சிமிட்டுவது போன்ற 3-ஆம் தர செயல்களால் பொய்களை நம்ப வைக்க முடியாது. 

இந்த உலகின் மிகப்பெரிய ஜனநாயகம் இதுபோன்ற பொய் பரப்புரைகளை பரப்பி வரும் கோமாளி இளவரசனை இனியும் நம்ப வேண்டுமா என்று தீவிரமாக ஆய்வு செய்ய வேண்டும் என்று தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com