பாரிக்கரிடம் சுமித்ரா மகாஜன் நலம் விசாரிப்பு

தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சை பெற்று வரும் கோவா மாநில முதல்வர் மனோகர் பாரிக்கரை மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் வியாழக்கிழமை


தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சை பெற்று வரும் கோவா மாநில முதல்வர் மனோகர் பாரிக்கரை மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் வியாழக்கிழமை சந்தித்து நலம் விசாரித்தார். 
உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு கடந்த 3 மாதங்களாக அமெரிக்காவில் சிகிச்சைப் பெற்று வந்த கோவா மாநில முதல்வர் மனோகர் பாரிக்கர் இம்மாதம் முதல் வாரம் இந்தியா திரும்பினார். சில நாட்களில் மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் வடக்கு கோவாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு, உயர் சிகிச்சைக்காக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த சனிக்கிழமை அவர் சேர்க்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சையளித்து வருகின்றனர். 
தற்போது இரைப்பை குடல் இயல் நிபுணரின் சிறப்புப்பிரிவில் சிகிச்சைப் பெற்று வரும் முதல்வர் பாரிக்கரை மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் சந்தித்து நலம் விசாரித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com