ஹிமாச்சல பிரதேசத்தில் ஜீப் விபத்து: 13 பேர் சாவு

ஹிமாச்சல பிரதேசத்தில் ஜீப் விபத்து: 13 பேர் சாவு

ஹிமாச்சல பிரதேசத்தில் சனிக்கிழமை ஏற்பட்ட ஜீப் விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர்.

ஹிமாச்சல பிரதேசத்தில் சனிக்கிழமை ஏற்பட்ட ஜீப் விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர்.

ஹிமாச்சல பிரதேச மாநிலத்தின் ஷிம்லாவில் அமைந்துள்ள சனைல் மலைப்பகுதியில் ஜீப் ஒன்று சனிக்கிழமை விபத்துக்குள்ளானது. மலைப் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். 

தியூனி சாலையில் குட்டூ என்ற சாலையில் 3 கிலோ மீட்டர் தூரத்தில் ஏற்பட்ட இந்த விபத்தில் ஒரு குழந்தை உட்பட 3 பேர் பலத்த காயங்களுடன் ரோஹ்ரூ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.  

விபத்து தொடர்பாக ஷிம்லா போலீஸ் அதிகாரி ஓம்பட்டி ஜம்வால், நேரில் சென்று பார்வையிட்டார். மேலும் ஜுப்பல், ஸ்வரா ஆகிய பகுதிகளைச் சேர்ந்த போலீஸார் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com