மோடிக்கு மாற்று யாரும் இல்லை: உ.பி. துணை முதல்வர்

மோடிக்கு மாற்று யாரும் இல்லை: உ.பி. துணை முதல்வர்

நாட்டில் பிரதமர் நரேந்திர மோடிக்கு மாற்று வேறு யாரும் இல்லை என்று உத்தரப் பிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மௌரியா தெரிவித்தார்.

நாட்டில் பிரதமர் நரேந்திர மோடிக்கு மாற்று வேறு யாரும் இல்லை என்று உத்தரப் பிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மௌரியா தெரிவித்தார்.
 உத்தரப் பிரதேச மாநிலம், லக்னௌவில் நடைபெற்ற பாஜகவின் ஓபிசி பிரிவு நிர்வாகிகள் கூட்டத்தில் அவர் பேசியதாவது:
 எதிர்க்கட்சிகளில் இருக்கும் ஒவ்வொருவரும் அடுத்த பிரதமர் தாங்கள்தான் என்று தெரிவித்து வருகின்றனர். ஆனால், மோடிக்கு மாற்று மோடிதான். மோடிக்கு மாற்று வேறு யாரும் இல்லை. தேர்தலில் வாக்குகளை பெறுவதற்காக கோயில்களை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவும் பயன்படுத்துவது கண்டிக்கத்தக்கது.
 அகிலேஷ் யாதவ் முதல்வராக இருந்தபோது, கன்வார் யாத்திரைக்கு அனுமதி தரவில்லை. ராமரின் பக்தர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது; தடியடி நடத்தப்பட்டது. இந்நிலையில், விஷ்ணுவுக்கு கோயில் கட்டுவது குறித்து அகிலேஷ் யாதவ் தற்போது பேசி வருகிறார்.
 காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி, புகைப்படங்களுக்காக ஒவ்வொரு கோயிலாக அடுத்தடுத்து செல்கிறார். ஹனுமன் சாலிசா பாடலை அவரிடம் பாட சொல்லுங்கள். நிச்சயம் அவரால் முடியாது என்றார் கேசவ் பிரசாத் மௌரியா.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com