டி.டி.பி. தலைவர்கள் கொலை: 3 மாவோயிஸ்டுகளின் அடையாளம் கண்டுபிடிப்பு

தெலுங்கு தேசம் கட்சி (டி.டி.பி.) எம்எல்ஏ, முன்னாள் எம்எல்ஏ ஆகிய 2 மூத்த தலைவர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய 3 மாவோயிஸ்ட் தீவிரவாதிகளின்


தெலுங்கு தேசம் கட்சி (டி.டி.பி.) எம்எல்ஏ, முன்னாள் எம்எல்ஏ ஆகிய 2 மூத்த தலைவர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய 3 மாவோயிஸ்ட் தீவிரவாதிகளின் அடையாளம் போலீஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
விசாகப்பட்டினம் மாவட்டம், அரக்கு தொகுதி தெலுங்கு தேசம் எம்எல்ஏ சர்வேஸ்வரா ராவ், முன்னாள் எம்எல்ஏ சிவேரி சோமா ஆகிய இருவரும் ஞாயிற்றுக்கிழமை மாவோயிஸ்டுகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். 
இந்த கொலையில் ஈடுபட்டது, மாவோயிஸ்ட் அமைப்பைச் சேர்ந்த ஜலமுரி ஸ்ரீநிபாபு, காமேஸ்வரி என்ற ஸ்வரூபா, வெங்கடரவி சைதன்யா என்ற அருணா ஆகிய 3 பேர் என்பதை போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். இதைத் தொடர்ந்து, அவர்களுக்கு எதிரான தேடுதல் வேட்டையை போலீஸார் முடுக்கி விட்டுள்ளனர்.
முன்னதாக, இந்த கொலை சம்பவத்தில் அருணா தலைமையில் பெண் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் ஈடுபட்டதாக போலீஸார் தெரிவித்திருந்தனர்.
இதனிடையே, தெலுங்கு தேசம் எம்எல்ஏ சர்வேஸ்வரா ராவ், முன்னாள் எம்எல்ஏ சிவேரி சோமா ஆகிய 2 பேரை மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொன்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து விசாகப்பட்டினத்தில் திங்கள்கிழமை முழுஅடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதேபோல், அவர்களது இருவரது உடல்களுக்கும் திங்கள்கிழமை இறுதிசடங்கு நடைபெற்றது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com