மத்திய பிரதேச மாநிலத்தின் தலைநகர் போபாலில் செவ்வாய்க்கிழமை(செப். 25) நடைபெறும் பாஜகவின் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித் ஷா ஆகியோர் உரையாற்றுகின்றனர்.
மத்திய பிரதேச மாநிலத்தில் சட்டப் பேரவை தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ளதை அடுத்து இந்த பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாரதீய ஜன சங்கத்தின் நிறுவனரான தீன தயாள் உபாத்யாயவின் பிறந்த தினத்தன்று நடைபெறும் இந்த பொதுக்கூட்டத்தில் பாஜகவின் வாக்கு சாவடி ஊழியர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் பங்கேற்கின்றனர்.