சென்னையில் இருந்து சனிக்கிழமை மதுரை வந்த வைகை விரைவு ரயிலில் ஏற்பட்ட இயந்திரக்கோளாறு காரணமாக இரண்டு மணி நேரம் தாமதமாக வந்தது.
வைகை விரைவு ரயில் வழக்கமாக மதுரைக்கு இரவு 9.25 மணிக்கு வந்தடையும். இந்நிலையில் சனிக்கிழமை அரியலூர் அருகே வந்தபோது ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக அரியலூர் ரயில் நிலையத்தில் 2 மணி நேரம் நிறுத்தப்பட்டது. இதையடுத்து இரவு 2 மணி நேரம் தாமதமாக 11.40 மணிக்கு மதுரை ரயில் நிலையம் வந்தது. இதனால் பயணிகள் அவதியடைந்தனர்.