சென்னை கிரீம்ஸ் சாலை முதல் போயஸ் கார்டன் வரை போக்குவரத்து நிறுத்தம்

தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக கடந்த செப்டம்பர் 22-ம் தேதி முதல் சென்னை கிரீம்ஸ் ரோடு

தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக கடந்த செப்டம்பர் 22-ம் தேதி முதல் சென்னை கிரீம்ஸ் ரோடு சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் அவருக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் அவர் சாதாரண சிகிச்சைப் பிரிவில் இருந்து தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

இதற்கிடையே திங்கள்கிழமை அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக அடுத்தடுத்து மருத்துவமனை தெரிவித்தது. இந்நிலையில் அப்பல்லோ மருத்துவமனை வளாகத்தில் பாதுகாப்புக்காக போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். 

சென்னை கிரீம்ஸ் சாலை முதல் போயஸ் கார்டன் வரை போக்குவரத்து தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com